Monday 31 December 2012

ஐயப்பன்


சபரி கிரி வாசனே ஐயப்பா 
சரணம் அடைந்தேனே ஐயப்பா 

உபவாசம் இருந்து உன் வாசல் அடைந்தேன் 
அபய கரம் தந்து காத்தருள்வாய் 
பாதாதி கேசமாய் நான் உன்னைக் காண என் 
பாவங்களைக் களைந்து நற்கதி அருள்வாய் 

பங்குனி உத்திரத்தில் அவதரித்தாய் நீ 
பாரில் உள்ளோர்  வாழ பிறப்பெடுத்தாய்
எங்கும்  நிறைந்த பரம்பொருளே 
எம்மதமும் உனக்குச் சம்மதமே 
சங்கடம் நீக்கிடும் சாஸ்தா நீ 
சகல உயிர்களுக்கும் ஆதாரம் நீ 
மங்களம் அருள்வாய் மணிகண்டா நீ 
மாயையை அகற்றி மெய் அறிவருள்வாய்