Monday 11 October 2010

ஸ்ரீரங்கநாதர்

ஸ்ரீ ரங்க புர வாசனே ரங்கனே பிருந்தாவன சாரங்கனே

காவேரி தீரமும் கனவேத கோஷமும்
கனி இனைய பாசுரமும் புடைசூழும் வரதனே

பன்னக சயனனே பரம தயாளனே
பங்கஜ நேத்ரனே பத்மநாபனே
விண்ணவர் போற்றும் வாசுதேவனே
வினைகளை களைவாய் வேங்கடேசனே
எண்ணுதர்க்கினிய பாண்டு ரங்கனே
ஏற்றங்கள் தருவாய் ஏழுமலையனே
முன்னவனே முதல் முடிவிலா முகுந்தனே
மனமுவந்தருள்வாய் மலரடி சரணம்

Friday 8 October 2010

ராமர்

ராகம்: ராமப்ரியா
தாளம்; ரூபகம்

பல்லவி
ராமம் லோகாபி ராமம் - ப்ரிய சீதா மனோஹரம் - சுந்தர (ராமம்)

அனுபல்லவி
ஷ்யாமம் தசரத புத்ரம் கருணா சமுத்ரம் ஸ்ரீ (ராமம்)

சரணம்
சுர சேவித சுககரம் அரவிந்த லோச்சனம்
வரதாபய கரம் சரணாகத ஜன ரக்ஷகம் (ராமம்)

பொருள்:
ராமன், லோகத்தில் இருக்கும் ஜீவன் அனைத்திற்கும் இதமானவன். லோகாபிராம - லோக + அபிராம என்று பொருள் கொள்ளவும். அபிராம என்றல் அழகு, இதம் என்று பொருள்.
ப்ரியமான சீதையின் மனத்தைக் கவருபவர். நமது மனத்தையும் தான். :)
ராம(ம்) - ப்ரிய சீதா  இடத்தில, ராக முத்திரை வந்தமர்ந்தது!
அழகன் அவன் - சுந்தரன்.

ஷ்யாமம் - நீல நிறமானவர்.
தசரத புத்ரம் - தசரதனின் மைந்தன்.
கருணா சமுத்ரம் - கருணைக்கடல்.

சுர சேவித சுககரம் - தேவர்கள் வணங்கும் இறைவன். சுகத்தை தன் கரத்தில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் அருள்பவன்.
அரவிந்த லோச்சனம் - தாமரை போன்ற மலர்ந்த கண்கள் உடையவன்.
வரதாபய கரம் - வரத, அபய ஹஸ்தங்கள் கொண்டவன்.
சரணாகத ஜனரக்ஷகம் - தன்னிடம் சரணடைந்த மானிடர்களை காப்பவன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

மீனாக்ஷி

மீனாக்ஷி கருணா கடாக்ஷி
சகல லோக சாக்ஷி தேவி

வனஜாக்ஷி வாமதேவ மனோஹரி
வந்தனம் சரணம் ரக்ஷிம்சு தேவி

மலையத்வஜ பாண்ட்யராஜ குமாரி
மதங்க முனி புத்ரி மாதங்கி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி சுககரி
ஹ்ரீம்கார பீஜ மந்த்ரேச்வரி

அர்த்தம்:

தேவி மீனாக்ஷி, கருணை ததும்பும் கண்கள் உடையவளே, அனைத்து உலகிற்கும் (அதல, விதல முதல் பாதாள  - பூமி முதல் சத்ய லோகம்) நீயே சாட்சி.

 நீல நிற தாமரை (வனஜா) போன்ற கண்கள் உடையவளே, வாமதேவனின்  (சிவன்)  மனத்திற்கு இனியவளே, உன்னை வணங்கி சரணடைகிறேன், என்னை காப்பாட்ட்றுவாய். [வாம - அழகு]

மீனாக்ஷி பற்றிய பிற குறிப்புகள்:

1. மலையத்வஜ பாண்டியனின் புதல்வி.
2. முற்பிறவியில், மதங்க முனியின் புதல்வி மாதங்கி.
3. ராஜராஜேஸ்வரி - அரசர்களுக்கெல்லாம் அரசி.
4. சுககரி - கையில் கிளியினை வைத்திருப்பவள் (சுக - கிளி).
5. ஸ்ரீ வித்யா உபாசனையில் முக்கியமானது ஹ்ரீம்கார பீஜாக்ஷரம். அந்த பீஜ மந்த்ரத்தின் நாயகி.

பாடலை கேட்க:


Check this out on Chirbit