Thursday 21 November 2013

காஞ்சி காமாக்ஷி

கருணை  பொழியும் கவின்மிகு கண்கள்
குறுநகை தவழும் இளஞ்செவ் விதழ்கள்
கரும்பும் வில்லும் பாசாங் குசமும்
ஒருங்கே தரிக்கும் அருட்திரு கரங்கள்
வருகின்ற பக்தர்கள் மகிழ்வுறும் வண்ணம்
அருட்தவ கோலத்தில் அழகாய் அமர்ந்து
திருவருள் புரியும் ஏகாம்பர நாயகி
உனைத் தொழுவார்க்கு ஒருதீங் கில்லையே 

No comments:

Post a Comment