Thursday 21 November 2013

நடராஜர்

ஆடல் அரசின் ஆனந்த நடனம்
ஆசை தீர கண்டு களித்தோமே

நாடும் அன்பருக்கு நாளும் நல்லருள் புரியும்
நடன சபாபதி நான் மறை துதி பதி

பாடி பணியும் அன்பர் பாவங்களை களைந்து
வீடு பேறும் தந்து ஆட்கொள்ளும் தெய்வமே
தேடி கிடைக்காத தெள்ளமுதே - மால் அயன்
தேடி கிடைக்காத தெள்ளமுதே - உன்னை
அடையும் வழி ஒன்று அதுவே சிவ நாம ஸ்மரணம்

இதனை பைரவி ராகத்தில் மிஸ்ர சாபு தாளத்தில் அமைத்துள்ளேன் 

No comments:

Post a Comment