Thursday 15 October 2009

சிவன்

காண வேண்டுமே பொன் அம்பலத்தையனின்
ஆனந்த நடனம்

வானவரும் போற்றும் ஞான சபை தன்னில்
கானமுழங்க சித்தானந்த நடனம்

மானிடரும் மகிழ் ரத்ன சபை தன்னில்
மத்தளம் கொட்ட சதானந்த நடனம்

கலைநயம் தழுவும் சித்ர சபை தன்னில்
கணமும் ஓயாமலே கவின்மிகு நடனம்

தாரணி போற்றும் தாமிர சபை தன்னில்
தீனரை காக்கும் பேரானந்த நடனம்


இந்த பாடல் பாபநாசம் சிவனின் காண வேண்டாமோ என்ற ஸ்ரீ ரஞ்சனி ராக பாடலின் சந்தத்தில் எழுதப்பட்டது. ஒரு சரணம் முடிந்ததும் பல்லவியை மீண்டும் பாட அல்லது சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment